என்னென்ன தேவை?
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - கால் கப்
மைதா மாவு - 3 டேபிள் ஸ்பூன்
துருவிய பாதாம், பிஸ்தா பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை
குங்குமப் பூ - 1 டீஸ்பூன்
நெய் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பாலைச் சுண்டக் காய்ச்சி, கோவா ஆக்கிக் கொள்ளவும். சர்க்கரையில் சிறிது
நீர் விட்டுப் பாகு காய்ச்சி, மைதா சேர்த்துக் கிளறவும். வெதுவெதுப்பான
பாலில் குங்குமப்பூவை ஊறவைத்து அதையும் இதில் ஊற்றிக் கிளறவும். கோவாவைச்
சேர்த்து சிறிது நெய் விட்டுக் கிளறினால் மலாய் பேடா தயார்.
துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும். பெரிய மூடியில் வட்டமாக அமுக்கி
எடுத்தால் வட்டமாக வந்துவிடும். இதைத் தயாரிக்க, சிறிது நேரமானாலும்
சாப்பிடும்போது அந்த அலுப்பு மறைந்துவிடும்.
No comments:
Post a Comment