என்னென்ன தேவை?
கோதுமை மாவு - 2 கப்
உருளைக் கிழங்கு - 1
தூதுவளை இலை - 1 கப்
கெட்டித் தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
உருளைக் கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசிக்கவும். தூதுவளை இலைகளைச்
சுத்தம் செய்து அலசவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தூதுவளை இலைகளைச்
சேர்த்து லேசாக வதக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு, சீரகத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கெட்டித்
தயிர், மசித்த உருளைக் கிழங்கு, வதக்கிய கீரை ஆகியவற்றைச் சேர்த்து சிறிது
நீர் தெளித்து மிருதுவாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய பூரியாக இட்டு,
சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
வெந்தயக் கீரை, பசலைக் கீரை, முளைக் கீரை ஆகியவற்றை வைத்தும் இந்தப் பூரியைச் செய்யலாம்.
No comments:
Post a Comment