Sunday, 10 May 2015

கொண்டைக்கடலை சாதம்

 
 படம்: எல். சீனிவாசன்

என்னென்ன தேவை? 
  
பாசுமதி அரிசி - 1 கப் 

கொண்டைக்கடலை - அரை கப் 

குடமிளகாய் - 1 கப் (பொடியாக அரிந்தது) 

இஞ்சி - பூண்டு விழுது, சாட் மசாலா, நெய் - தலா 1 டீஸ்பூன் 

பிரியாணி இலை - 1 

தேங்காய்ப் பால் - 2 கப் 

உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன் 

தக்காளி - 4 

பட்டை, கிராம்பு - 1 அங்குலத் துண்டு 

வெங்காயம் - 3 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

மசாலா அரைக்க 

சீரகம் - 1 டீஸ்பூன் 

பூண்டு - 8 பல் 

காய்ந்த மிளகாய் - 6 

சின்ன வெங்காயம் - 8 


எப்படிச் செய்வது? 

 
கொண்டைக்கடலையை 10 மணி நேரம் ஊறவைத்து உப்புப் போட்டு வேகவைத்து எடுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவைத்து அரைக்கவும். 

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிரியாணி இலை, குடமிளகாய், அரைத்துவைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி வைக்கவும். 

அரிசியைத் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து, நீரை வடிக்கவும். பிறகு ஈரம் போகும் வரை நெய்யில் அரிசியை வறுக்கவும். வறுத்த அரிசியில் தேங்காய்ப் பால் விட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
வேகவைத்த கொண்டைக்கடலை, வதக்கிய குடமிளகாய் மசாலா, வெந்தய இலை, சாட் மசாலா சேர்த்து லேசாகக் கொதித்ததும், குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து சுடச் சுடப் பரிமாறவும்.

No comments:

Post a Comment